மனித இன வரலாறு -45

சிலுவைப் போர்கள்

- மு.நீ.சிவராசன்

எருசலேம் பாலஸ்தீனத்தின் மிகப் பழைய நகரம். இது யூதர், கிறித்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு வழிபாட்டு இடம். இங்கேதான் யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். எனவே கிறித்துவர்கள் இவ்விடத்தை புனித இடமாகப் போற்றுகின்றனர்.

முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமயப் போட்டியின் காரணமாக கி.பி. 1096 முதல் 1270 வரை எட்டு சிலுவைப்போர்கள் நடந்தன. இச்சண்டைகளுக்குச் சென்ற கிறித்துவர்கள் செந்நிறத் துணியால் செய்யப் பட்ட சிலுவை அடையாளங்களை அணிந் தனர். இதன் காரணமாக இப்போர்கள் சிலுவைப் போர்கள் என அழைக்கப்பட்டன.

கி.பி. 1071இல் எருசலேமைத் துருக்கியர் கைப்பற்றினர். இவர்கள் கிறித்துவப் பயணி களைத் துன்புறுத்தினர். இதையறிந்த போப் பாண்டவர் இரண்டாம் அர்பன் அய்ரோப்பா வில் வாழ்ந்த அனைத்து கிறித்துவர்களையும் புனித பூமியான பாலஸ்தீனத்தை வென் றெடுக்கப் போர் தொடுக்குமாறு ஆணை யிட்டார். அவரின் ஆணைக்கிணங்க அரசர் முதல் விவசாயிகள் ஈறான அனைத்து கிறித்து வர்களும் சிலுவைப் போர்களில் கலந்து கொண்டனர்.

கி.பி. 1212இல் வரலாற்றிலேயே மிக விந்தையான துக்ககரமான செயல் ஒன்று நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான பிரெஞ்சு, ஜெர்மானிய சிறுவர்களும், சிறுமிகளும் பெரும்படையாகத் திரண்டு புனித பூமியை மீட்கச் சென்றனர். இவர்களில் சிலர் வழியில் மடிந்தனர். சிலர் பகைவர்களால் கைப்பற்றப் பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். இத்துன்ப நிகழ்ச்சி சிறுவர் சிலுவைப்போர் என்று வழங்கப்படுகிறது. மதம் மக்களை ஒன்றுபடுத்தாது என்ற தந்தை பெரியாரின் கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது.

சிலுவைப்போர்களின் நோக்கம் நிறைவேற வில்லை. ஆனால் அய்ரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே ஆன தொடர்பு பெருகி, வாணிபம் செழித்து வளர்ந்தது.

Archives

?பெரியார் பிஞ்சு

2008