விளையும் பயிர்

தந்தை பெரியாரின் 130ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பழநி இரயிலடிச் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே 19.9.2008 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சிறப்பு பேச்சாளராக அதிரடி அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பெரியார் பிஞ்சு மெ.சே.மதிவதனி (13 வயது) அவர்கள் கலந்துகொண்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது - மதத்தின் பெயரால் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது, குசராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மதவெறிக் கூட்டத்தின் வெறியாட்டம், கச்சத்தீவு பிரச்சனை ஈழத் தமிழர்களின் இன்னல்கள், சேதுக்கால்வாய் திட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகள் பற்றியும் தந்தை பெரியாரின் பெருந்தொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் அணுகுமுறைகள் பற்றியும் பெரியார் பிஞ்சு. மெ.சே. மதிவதனி பேசியது இயக்கத் தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பெரியவர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 20 நிமிட உரையும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மதிவதனியின் உரையை பாராட்டி சால்வை, பேனா, மற்றும் அன்பளிப்பாக ரூ. 150ஆம் வழங்கினார்கள். அந்தத் தொகையை மேடையிலேயே தமிழர்களின் வாழ்வுரிமை ஏடாம் விடுதலை வளர்ச்சி நிதியாக அதிரடி அன்பழகனிடம் வழங்கினார். மதிவதனியின் பேச்சை அனைத்து தரப்பு மக்களும் வியந்து பாராட்டினர்.

வாசகர்களுக்கு...

பல்திறன் ஆற்றல் பெற்ற பெரியார் பிஞ்சுகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப் பட உள்ளனர். கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, நடிப்பு, இசை, விளையாட்டு மற்றும் கலைத் திறனில் சிறந்து விளங்கி உள்ளூர் அமைப்புகள் மற்றும் தங்களது பள்ளிகளால் பாராட்டப்படும் பெரியார் பிஞ்சுகள் தங்களது புகைப்படத்துடன் தமது திறமை மற்றும் வெற்றிகள் பற்றிய குறிப்புகளோடு பெரியார் பிஞ்சு இதழுக்கு அனுப்பி வைக்கலாம். அந்தந்த மாவட்ட அல்லது மாநில தி.க. பொறுப்பாளர் ஒருவரின் அறிமுகக் கடிதம் அவசியம்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008