Home விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 



கவிஞர்கள் கவிதை எழுத கற்பனை ஓவியமாகவும், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டக் காட்டும் ஓர் அழகு உருவமாகவும், இரவில் தன் ஒளி தரும் விளக்காகவும் இருந்து வரும் நிலாவில் நிலம் வாங்கலாமா? என்று கேட்பது வியப்பாகவும், வினோதமாகவும் இருக்கின்றதல்லவா...! அப்படி என்ன நிகழ்ந்துள்ளது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
‘சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா!’ என்ற பாடல் வரிகளைக் கேட்டு ரசித்திருப்போம். அவர் நிலவைத் தொட்டு விட்டு மட்டும்தான் வந்தாரா என்றால் இல்லை.
கற்பனையிலேயே நிலவைப் பற்றிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களுக்கு மத்தியில் முதன்முதலில் நிலவில் கால் தடம் பதித்தவர்கள் அமெரிக்கர்கள். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் 1969 ஜூலை 16ஆம் நாள் நிலவை நோக்கிப் பறந்தது நாசாவின் அப்போலோ - 11 விண்கலம். 4 நாள்கள் பயணத்திற்குப் பின், ஜூலை 20ஆம் நாள் நிலவின் அருகே நிறுத்தப்பட்டது அந்த விண்கலம்.


அடுத்த நாள், அதாவது 1969 ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 3.00 மணி அளவில் தூசு போன்ற மணல் பரப்பில், மனித இனம் சார்பில் முதன்முதலாக நிலவில் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். அடுத்ததாக நிலவின் நிலப்பரப்பில் கால் வைத்தார் ஆல்ட்ரின்.
பல்வேறு ஆய்வுக் கருவிகளை நிலவில் பொருத்திய அவர்கள், அங்கே சிதறிக் கிடந்த பாறைகளையும், சிறு கற்களையும், மண்ணையும் சேகரித்துக் கொண்டனர். அதன் மொத்த எடை 382 கிலோகிராம் என்று கூறப்படுகிறது.


இப்படியாக புது மகிழ்ச்சியில் இரண்டரை மணி நேரம் நிலவின் நிலப்பரப்பில், நேரத்தைச் செலவிட்டனர். இருவராலும் புதிய சாதனை படைக்கப்பட்டதை, பூமியில்  இருந்தவாறு  பூரிப்புடன் பார்த்து ரசித்தது நாசா. அடுத்த சில நிமிடங்களில் பூமிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. அடுத்த 4 நாள்கள் பயணம் செய்து பூமியை வந்தடைந்தனர்.
இவ்வாறாக அப்போது கொண்டு வரப்பட்ட மண்ணில்தான், செடிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இன்றைய விஞ்ஞானிகள். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா?
ஆம். அப்பல்லோ 11, 12 மற்றும் 17 போன்ற விண்கலங்களை அனுப்பியபோது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 53 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர்_ நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும். இந்த ஆய்வில் அரபிடோப்சிஸ் என்னும் தாவர விதையை விதைத்துள்ளனர். இது கடுகு வகையைச் சேர்ந்த செடி எனத் தெரிகிறது. ஒரு செடிக்கு ஒரு கிராம்_ அதாவது ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே நிலவின் மண்ணைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் விதையை விதைத்து, தண்ணீர் தெளித்துப் பாதுகாத்துள்ளனர் விஞ்ஞானிகள். இரண்டு நாள்களில் அந்த மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக முளைத்துள்ளன.


பூமியில் வளரும் மற்ற தாவரங்கள் போல இந்த தாவரத்திலும் விதைகள் வெடித்து வெளியே வந்தாலும் வேர்களின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளது. இதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்ற முயற்சியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் இதற்குத் தீர்வு காண்போம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நிலவின் மண்ணில் சத்துகள் குறைவாகவே இருக்கின்றன என்பதால் செடி செழித்து வளரத் தேவையான முயற்சிகளைக் கவனமுடன் எடுத்து வருகின்றார்களாம். இது நல்ல பலனைத் தந்துள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.


இப்போது புரிந்துவிட்டதா? நிலாவில் நிலம் வாங்க ஏன் உங்களைத் தயார்படுத்தினேன் என்று?
இனி வரும் காலங்களில் நிலவை ஆராய்ச்சி செய்யச் செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் அங்கேயே அவர்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் எனவும், மேலும் மற்ற கோள்களிலும் இது போன்ற ஆராய்ச்சியை முன்னெடுக்க இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் என்றும் உறுதியாகக் கூறலாம். இவற்றிற்கெல்லாம் மேலாகப் பூமியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கான மாற்று வழிகளைக் கட்டமைத்துக் கொள்ள இந்த ஆராயச்சியின் முடிவுகள் நமக்குப் பெருமளவு துணை புரியும்.<

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்