Home அசத்தும் அறிவியல்
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
அசத்தும் அறிவியல்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கை ரேகைகளைக் கண்டுப்பிடிப்போமா?


நமது இரண்டு கை ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகள் தான் கை ரேகைகள் ஆகும்.
உங்கள் கை விரல்கள், கால் விரல்களில் உள்ள இந்த சிறிய மடிப்புகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. இது உங்கள் அம்மாவுக்குள் நீங்கள் கருவாக வளரும்போதே உருவானது.
அதனால் தான் கை ரேகை என்பதை தனி ஒருவரின் அடையாளமாகப் பதிவு செய்து கொள்கிறார்கள்.
எந்தத் திட மேற்பரப்பையும் நாம் தொட்டால் அங்கு நம் கை ரேகைகள் பதிவதைக் காணலாம். கை ரேகைகளை, அவை காணப்படும் மேற்பரப்பின் வகை மற்றும் அவை கண்ணுக்குத் தெரிகிறதா இல்லையா என்பதைப் பொறுத்து ஆய்வாளர்கள் மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.


மென்மையான மேற்பரப்புகளான சோப்பு, மெழுகு, ஈரமான வண்ணப் பூச்சு, புதிய தாள் போன்றவற்றில் பதியும் கை ரேகைகள் மிக எளிதாக அவற்றில் படிந்துவிடுகின்றன. இதன் மூலம் நம் கைரேகை அச்சு உருவாக்கிய பதிவுகள் மேடு பள்ளங்களோடு அவற்றில் காணப்படும். அதாவது முப்பரிமாண வடிவத்தில் இருக்கும்.
கடினமான மேற்பரப்புகளில் இத்தகைய படிமங்கள் உருவாகாது எனினும், அவற்றில் கண்ணுக்குப் புலப்படும் வகையிலோ (Patent) அல்லது புலப்படாத வகையிலோ (Latent) நிச்சயம் அச்சுகள் பதிவாகும். நம் விரலில் ஒட்டியுள்ள இரத்தம், அழுக்கு, மை, வண்ணப் பூச்சு போன்றவை நாம் தொடும் கடின மேற்பரப்புகளில் பதிவாகும்.
இவை மட்டுமல்லாமல், நம் உடலில் இயற்கையாக உருவாகும் எண்ணெய்ப் பசை, வியர்வை போன்றவை நம் கை ரேகை அச்சுகளை நாம் தொடுமிடங்கள் அனைத்திலும் பதிய வைக்கின்றன. நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவற்றைப் பதியவைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.


அதனால்தான் குற்றங்களைக் கண்டுபிடிக்க முதலில் காவல் துறையினர், கை ரேகைகளைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். நேரடியாகத் தெரியும் கை ரேகை அச்சுகளை எளிதில் கண்டுபிடித்து உயர்தரமான ஒளிப்படம் (Photograph) எடுத்துக் கொண்டு, அவற்றை ஆதாரமாகக் கொள்வர்.
கண்ணுக்குத் தெரியாத கை ரேகை அச்சுகளைக் கண்டுபிடிக்கப் பல முறைகள் உள்ளன. கை ரேகைப் பொடிகள், வேதிப் பொருள்கள், புற ஊதாக் கதிர் முறை, மாற்று ஒளி மூலங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அவை பதிவு செய்யப்படுகின்றன.
கை ரேகைகள் பதிவாகியுள்ள இடங்களில், அவற்றைக் கண்டறிவதற்கான பொடியைப் பயன்படுத்தி காணும்படி செய்வார்கள். பின்னர் அதை ஒளிபுகும் ஒட்டும் நாடா (Transparant Tape) கொண்டு ஒற்றி எடுத்து நாடாவில் (tape) பதிவு செய்துகொள்வதன் மூலம் ஆதாரமாகக் கொள்ள முடியும்.
எனவே, இவற்றைப் பதிவு செய்யும்போது பிறரது கை ரேகைகள் அந்த இடத்தில் பதிவாகிவிடாமலும், இருக்கும் கை ரேகைகள் அழிந்துவிடாமலும் பதிவு செய்வது முக்கியம் ஆகும்.
கை ரேகையைப் பதிவு செய்வதற்கான பொடியில் கருப்பு கிரானுலர், அலுமினிய செதில், கருப்புக் காந்தம் ஆகியன இருக்கும். இப்போது, சயனோ அக்ரிலேட் என்ற சூப்பர் பசை உள்ளிட்ட இன்னும் சில புதிய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

நீங்களும் பல திரைப்படங்களில் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் இன்னும் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை ஆர்வமிருந்தால் இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். நமது கை ரேகைகளை அதன் அளவு, வடிவம் போன்றவற்றைக் கொண்டு எளிதில் கண்டு கொள்ளலாம். துல்லியமாக ஆராய்வதற்கு நமக்கு உருப்பெருக்கிக் கண்ணாடிகள் தேவைப்படும்.கை ரேகைகள் எங்கெல்லாம் தேவைப் படுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். =அந்தக் காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாமையால், கையொப்பம் போடத் தெரியாதவர்கள் தங்களது ஒப்புதலைத் தெரிவிப்பதன் அடையாளமாக கை நாட்டு என்னும் பெயரில் கை ரேகை வைப்பார்கள். = குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறை கை ரேகைகளைப் பதிவு செய்யும்.= ஆதார் அட்டை, சில நாடுகளின் விசா பதிவு போன்றவற்றிற்கும் கை ரேகை பதிவு செய்யப்படுகிறது.= நாம் பயன்படுத்தும் செல்பேசியில் கை ரேகைகளைப் பதிவு செய்து இயக்குவதை நீங்கள் அன்றாடம் செய்வீர்கள் தானே! (இந்தச் செல்பேசிகள் நமது கை ரேகைகளை டிஜிட்டலாகப் பதிவு செய்துகொள்கின்றன.)அறிவியல் அடிப்படையில் கை ரேகைகள் இப்படிப் பயன்படுவது போலவே, ‘கை ரேகையை வைத்து ஜோசியம் பார்க்கிறோம்; உங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்கிறோம்’ என்று ஏமாற்றும் பேர்வழிகளும் நம் நாட்டில் உண்டு. அதற்கும் அறிவியலுக்கும் கொஞ்சமும் தொடர்பு கிடையாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
கை ரேகைகளின் வடிவங்களைக் கொண்டு அவற்றை எளிதாகப் பகுத்துப் பார்க்கலாம். வில் வளைவு, வளைவு, சுருள் என்று வகைப்படுத்தி அடையாளம் காணலாம்.

 

நாம் சோதித்துப் பார்க்கலாமா?
உங்கள் வீட்டில் உள்ளவர்களின் கை ரேகைகளைப் பதிவு செய்து அதில் யாருடையது எந்தக் கை ரேகை என்பதை அடையாளம் காணலாமா?
முதலில், அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து, அவரவர் பெயர் போட்டு ஒரு கோப்பு (File) உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு, உங்களுக்குத் தெரியாமல், ஒரு பொருளை அவர்களில் யாரேனும் ஒருவர் தொட்டு எடுத்து வைக்க வேண்டும்.
அந்தப் பொருளில் பதிவாகியுள்ள கைரேகையை நீங்கள் எடுத்துப் பதிவு செய்துகொண்டு, ஏற்கெனவே உங்கள் கோப்பில் உள்ள கை ரேகைகளில் இந்தக் கை ரேகை யாருடையது என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.


இதே விளையாட்டை வேறு வகையிலும் விளையாடலாம். ஒவ்வொருவரையும் ஒரு பொருளைத் தொடச் சொல்லி, அவை அனைத்தையும் நீங்கள் எடுத்து ஆராய்ந்து, எந்தப் பொருளை யார் தொட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லலாம்.
அதற்கு முதலில் கை ரேகைக் கோப்பு உருவாக்க வேண்டும் அல்லவா?
தேவையான கருவிகள்:
பென்சில், முத்திரை மை, காகிதம், தெளிவான ஒளிபுகும் ஒட்டும் நாடா, கையுறைகள், பவுடர்
செய்முறை:
பென்சிலை ஒரு காகிதத்தின் சிறிய பகுதியில் முன்னும் பின்னும் தேயுங்கள்.
உங்கள் அப்பா அல்லது அம்மாவின் இடது கட்டை விரலைப் பென்சில் தேய்த்த பகுதியில் நன்கு ஒற்றி எடுக்கச் செய்யுங்கள். இப்போது அந்த பென்சில் துகள்கள் உங்கள் விரலில் ரேகைப் பகுதியில் பதிவாகி இருக்கும்.

 

இப்போது அந்த ஒளிபுகும் ஒட்டும் நாடாவை (Transparent tape) அம்மா/அப்பாவின் விரலின் மீது ஒட்டி, அதை உரித்து எடுத்துவிடுங்கள். (இப்படிச் செய்யும்போது உங்கள் கை ரேகை அதில் பதிந்துவிடாமல் கவனமாகச் செய்யுங்கள்)
அந்த நாடாவை வேறெதுவும் தொட்டுவிடாமல், தெளிவாகத் தெரியும்படி ஒரு தாளில் ஒட்டிக் கொள்ளுங்கள்.
இப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகைகளையும் எடுத்துக் கோப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது மையை விரலில் தடவி, நேரடியாகவே தாளில் அதனைப் பதிவு செய்துகொள்ளலாம்.
இனி, அந்த விளையாட்டை விளையாடுங்கள்.
நீங்கள் கையுறையை அணிந்து கொள்ளுங்கள். யாரேனும் தொட்ட பொருளை எடுத்து, அதில் உள்ள கை ரேகையை பவுடர் கொண்டோ, அல்லது நேரடியாக நாடாவைக் கொண்டு ஒற்றி எடுத்தோ அந்தக் கை ரேகையைப் பதிவு செய்யுங்கள்.
பிறகு அதனைக் கவனமாக ஆராய்ந்து, நீங்கள் முன்பே பதிவு செய்து வைத்துள்ள கை ரேகைகளுடன் ஒப்பிட்டு, பொருளைத் தொட்டது யார் என்று கண்டுபிடியுங்கள்.
முதலில் அந்தக் கை ரேகை வில் வளைவா? வளையமா? சுருளா? என்பதைப் பார்த்து, அதன் பின் நுணுக்கமாக ஆராயலாம்.
செய்து பார்த்துவிட்டு, உங்கள் அனுபவத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.
* * *
கை ரேகைகளைக் கொண்டு குற்றம் இழைத்த குற்றவாளிகளையும் அடையாளம் காணலாம். கை ரேகைகளைக் கொண்டு ’ஜோசியம் பார்க்கிறேன்’ என்று ஏமாற்றும் குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
நீங்களும் அடையாளம் காண்பீர்கள் தானே!

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்