Home தொடர் கதை - 2 : வழக்குரைஞரிடம் வாதிட்ட எலுமிச்சை
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
தொடர் கதை - 2 : வழக்குரைஞரிடம் வாதிட்ட எலுமிச்சை
PDF  | Print |  E-mail
User Rating: / 1
PoorBest 

வழக்குரைஞர் வீட்டிற்கு வந்து சேர்ந்த பழனிவேல், எலுமிச்சைப்பழத்தை எடுத்து மேசைமீது வைத்தார்.
“என்ன பழனிவேல், எலுமிச்சையோடு வந்திருக்கீங்க!’’ வழக்குரைஞர் கேட்டார்.
“எலுமிச்சைப்பழம் பொதுநல வழக்கு போடப்போகுதாம். அதுக்குத்தான் உங்களிடம் வந்தேன்!’’ பழனிவேல் சொல்ல, வியப்போடு நோக்கினார் வழக்குரைஞர்.
ஆமாம் அய்யா, நான் பொதுநல வழக்குப் போடத்தான் உங்களிடம் வந்தேன்!’’ என்று இடையில் குறுக்கிட்டு எலுமிச்சை கூறியதும், வழக்குரைஞருக்கு மேலும் அதிர்ச்சி!
“என்ன வழக்கு?’’ வழக்குரைஞர் கேட்க, “உணவுக்குப் பயன்படவேண்டிய என்னை, பலி, காவு, திருஷ்டி கழிப்பு என்று தெருவில் நசுக்கிப் பாழாக்குகிறார்கள். உணவுப் பொருளைப் பாழாக்குவது குற்றம் என்பதால், பொதுநலன் கருதி இச்செயல்களைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரவேண்டும்’’ என்றது எலுமிச்சைப்பழம்.
“விசித்திர வழக்காக இருக்கிறதே!’’ வழக்குரைஞர் திகைத்துப் பேசினார்.
“விசித்திர மனிதர்கள் வாழும் நாட்டில் வழக்கும் விசித்திரமாகத்தானே இருக்கும்! நான் வழக்குத் தொடுப்பது நல்ல நோக்கத்தில் தானே?’’ எலுமிச்சை விளக்கம் அளித்து வினாவும் எழுப்பியது.
“உனது வழக்கு நியாயமானது! ஆனால், புதுமையானது. இப்படியொரு வழக்கை எந்த வழக்குரைஞரும், எந்த நீதிமன்றமும் சந்தித்தது இல்லை!’’
இதற்கு முன்னுதாரணம் இருக்கு.


“தன் கன்றைத் தேரேற்றிக் கொன்ற இளவரசனுக்கு எதிராய், மன்னனிடம் பசு நீதி கேட்டது என்று கதை கூறப்படுகிறது அல்லவா?’’
“ஆமாம்’’
“இப்போது எலுமிச்சை நீதி கேட்கிறது. காலவளர்ச்சிக்கு ஏற்ப இது நடக்கத்தானே செய்யும்!”
“சிறப்பாக வாதம் செய்கிறாயே! உனக்கு வழக்குரைஞரே தேவையில்லையே!’’ என்று வழக்குரைஞர் கூற,
“உண்மைதான். ஆனால் சட்டப்படி சிலவற்றைச் செய்துதானே வழக்குத் தொடர முடியும்? அதற்கு வழக்குரைஞர் தேவைதானே!’’ என்றது எலுமிச்சை.
“உண்மைதான். வழக்கில் நீ கேட்கும் தீர்வு என்ன? நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்க வேண்டும்!’’
“எலுமிச்சைப் பழத்தைக் காவு, பலியென்கிற பெயரில் பாழாக்குவதை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்’’ இதுதான் எனது முதன்மையான வேண்டுகோள்.
“சரி. நான் வழக்குக்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுகிறேன். நீதிமன்றத்திற்கு வந்துவிடுங்கள்’’ என்று வழக்குரைஞர் கூற,
எலுமிச்சை விடைபெற்றது.
வழக்குரைஞர் பழனிவேலுவிடம், “வழக்குத் தேதி குறிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்திற்கு எலுமிச்சையோடு வந்துவிடுங்கள்.” என்றார்.
***


நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஏற்கப்பட்டு, தேதியறிவிக்கப்பட்டதும், பழனிவேலுவிடம் வழக்குரைஞர் தெரிவிக்க, எலுமிச்சையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார் பழனிவேல்.
செல்லும் வழியில் ஒரு பூசணிக்காய் எலுமிச்சையைப் பார்த்து வணக்கம் சொன்னது. பதிலுக்கு எலுமிச்சையும் வணக்கம் சொன்னது.
“எங்கே புறப்பட்டுப் போறீங்க!’’
“நான் நீதிமன்றத்திற்குப் போறேன்!’’
“என்ன, நீதிமன்றத்திற்கா!’’
“ஆமாம். என் வழக்கு இன்று விசாரணைக்கு வருது. அதுக்குத்தான் பழனிவேல்கூட போய்க்கிட்டிருக்கேன்.’’
“எனக்கு ஒண்ணும் புரியலையே! கொஞ்சம் புரியும்படி சொல்லேன்!’’
உணவுக்குப் பயன்படுற என்னை, சாலையில் நசுக்கிப் பாழாக்கிறத தடைசெய்யணும்னு பொதுநல வழக்குப் போட்டிருக்கிறேன். அதுக்குத்தான் போறேன்.
“அப்படியா! நல்ல வழக்காச்சே! “அப்படின்னா நானும் இந்த வழக்கிலே சேர்ந்துக்கிறேன். என்னையுந்தானே சாலையில் உடைத்துப் பாழாக்குறாங்க! அதையும் தடுக்க நானும் வழக்கில் சேர்ந்துகொள்கிறேன். பழனிவேல் அய்யா, என்னையும் வழக்குரைஞரிடம் அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றது பூசணிக்காய்.
“சரி, நீயும் எங்களோட வா! வழக்குரைஞரிடம் சொல்வோம்.’’
மூவரும் நீதிமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒருவர் எதிர்ப்பட்டார். மண்டை உடைந்து கிடந்த அவரைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
(வழக்கு வளரும்)


Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்