Home கணக்கும் இனிக்கும்: பெரிய்ய்ய் எண்கள்
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
கணக்கும் இனிக்கும்: பெரிய்ய்ய் எண்கள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 


“உனக்குத் தெரிந்த மிகப் பெரிய எண் எது?” என்று நான்கு வயது குழந்தையிடம் கேட்டபோது, ‘104’ என்றது.
“நூற்றுப்பத்து தெரியுமா?”
“110?... ஆமா தெரியுமே.”
“அப்ப அதை ஏன் சொல்லல?” என்ற போது,
“எனக்கு 110 தெரியும்; ஆனா 104தான் பெரிய எண்” என்றது.
ஆரம்பத்தில் நமக்கு 1-10 வரையில் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். பின்னர் 11-20, மெதுவாக 21-50, அப்படியே தொடர்ந்து நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி என சொல்லிக் கொடுத்திருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த பெரிய எண் எது? கடகடவென 9இல் ஆரம்பித்து பக்கத்தில் 9 போட்டுக் கொண்டே செல்வீர்கள் தானே?


1 -  ஒன்று
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்
10000 - பத்தாயிரம்
1,00,000 - லட்சம்
10,00,000 - பத்துலட்சம் (மில்லியன்)
1,00,00,000 - கோடி
எங்கே எல்லாம் அன்றாட வாழ்வில் இத்தனை பெரிய எண்களைக் கேள்விப்பட்டு இருப்போம்? இதெல்லாம் உண்மையில் தேவையா? கோடி ரூபாய் பணம்?
நமது நாட்டின் மக்கள் தொகை சுமார் 140 கோடி (2021ஆம் ஆண்டு) மனித உடலில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை 3.72 ஙீ 1013
இதென்ன 10க்குப் பக்கத்தில் 13 என்று எழுதி இருக்கு? அதுவும் மேல எழுதி இருக்கு? அப்படின்னா 13 முறை 10யை பெருக்கணும். எவ்ளோ வரும்?
3.72 X 10 X  10 X  10 X  10 X  10 X  10 X  10 X 10 X  10 X  10 X  10 X  10 X  10
= 3.72 X 10000000000000
= 37200000000000

இவ்ளோ பெருசா எழுத முடியாதுன்னு தான் 3.72 X 1013 இப்படி எழுதறோம்.
முன்னர் இந்திய மக்கள் தொகை 140 கோடின்னு சொன்னோம். இதனை எப்படிக் குறிப்பிடுவது?
140 X 1,00,00,000
= 1.40  X 1000000000 = 1.40 X 109


இந்திய மக்கள் தொகையே இவ்வளவு இருக்குதுன்னா உலக மக்கள் தொகை... எம்மாடியோவ்! இதுநாளுக்கு நாள், ஏன் விநாடிக்கு விநாடி அதிகரிச்சிட்டே இருக்கு? ஒவ்வொரு நொடிக்கும் குழந்தைகள் பிறந்துக்கிட்டே இருக்கு. நொடின்னு சொன்னதும் இன்றொன்று நினைவுக்கு வருது. ஓர் ஆண்டில் எத்தனை நொடிகள் இருக்கும்?
ஓர் ஆண்டில் 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணிநேரம், ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள்.
இப்ப சொல்லுங்கள், எத்தனை விநாடிகள் இருக்கும்?
= 365 X 24 X 60 X 60
= 31,536,000
= 3.1536 X 107


நம்ம வயசு 10 என்றால் ஒரு 10அய் பெருக்கிக்கலாம். அப்ப, பத்து வயது குழந்தை இது வரையில் 3.1536 X 108 நொடிகள் வாழ்ந்திருக்கும்.
நமக்கே இவ்வளவு நொடிகள் வருதே, அப்ப நம்ம பெற்றோருக்கு? அதைவிட பெருசான்னா... கட்டிடங்கள்? ஏரி? குளம்? பூமி?
பூமிக்கு என்ன வயசு இருக்கும்? அது எத்தனை நொடிகள் பார்த்திருக்கும்?
பூமியின் வயதை 4.54 X 109 ஆண்டுகள் என்று கணக்கிடுகின்றார்கள். அப்ப நம்ம நொடி கணக்குக்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டையும் பெருக்கணும். ஒரு சாக்லேட் விலை 10 ரூபான்னா, 5 சாக்லேட் விலையைக் கண்டுபிடிக்க என்ன செய்வோம்?
10 + 10 + 10 + 10 + 10 = 10 X 5  அப்படின்னா பூமி பார்த்துள்ள நொடிகள்
=  (3.1536 X 107) X  (4.54 X 109)
~ 14.31 X 1016    = 1.43 X 1017


(இதுவரைக்கும் = ன்னு போட்டுகிட்டு இருந்தோம். இப்ப என்ன திடீர்னு ‘~’ன்னு போடுகின்றோம். ‘~’அப்படின்னா தோராயமாகன்னு அர்த்தம். பெரிய எண்கள் வரும்போது இப்படி தோராயக் கணக்கு போடுவோம். ரொம்ப குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை.
பூமி பார்த்துள்ள நொடிகள் 43 X 1017 நொடிகள்
அதாவது 14300000,00000,00000 நொடிகள்

 

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்