
ஆடும் மயிலைப் பாரம்மா - அதன் அழகே மயக்கும் தானம்மா! ஓடும் மானைப் பாரம்மா - அஃது உன்னைக் கவரும் தானமம்மா! பாயும் புலியைப் பாரம்மா - அது பதுங்கிப் பாய்ந்திடும் தானம்மா! மேயும் பசுவைப் பாரம்மா - அதன் *மேன்மை பாலால் தானம்மா! திருட்டுப் பூனை பாரம்மா - அது தேடும் எலியைத் தானம்மா! கருப்புக் காக்கை பாரம்மா - அது *கரந்து வாழும் தானம்மா! கூவும் குயிலைப் பாரம்மா - அதன் குரலோ இனிமை தானம்மா! தாவும் குரங்கைப் பாரம்மா - தன் குட்டியைக் காக்கும் தானம்மா! நாயின் வாலைப் பாரம்மா - அதில் நன்றி தெரியும் தானம்மா! பேசும் கிளியைப் பாரம்மா - அதன் பேச்சும் இனிமை தானம்மா! < - அழகுநிலவன், புதுக்கோட்டை
|