உலக நாடுகள் : தாய்லாந்து (THAILAND) | |||
|
அமைவிடமும் எல்லையும்: ¨ தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு. ¨ வடக்கே மியான்மரையும், லாவோசையும், கிழக்கே கம்போடியாவையும், தெற்கே தாய்லாந்து வளைகுடாவையும், மலேசியாவையும், மேற்கே அந்தமான் கடல் பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தென்மேற்கே இந்தோனேசியாவும் இந்தியாவும் உள்ளன. ¨ மொத்தப் பரப்பளவு 198 சதுர மைல். ¨ தலைநகரம்: பேங்காக். இதுவே பெரிய நகரம். மக்களும் மொழியும்: ¨ மக்கள் ‘தாய்’ (Thai) என அழைக்கப்படுவர். ¨ பெரும்பாலான மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். ¨ மொழிகள் 62 (அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகள்) ¨ ஆட்சிமொழி ‘தாய்’ மொழியாகும். ¨ மக்கள் தொகை 69.31 மில்லியன், உலக அளவில் 20ஆவது இடம். ¨ பெரும்பாலான மக்கள் சீனர்கள். வரலாறு: ¨ இங்கு 40,000 ஆண்டுகளுக்கு முன் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ¨ ஒன்றாம் நூற்றாண்டில் “பொஊ’’ அரசும், பிறகு “புனான்’’ அரசும் இங்கு ஆட்சி செய்துள்ளன. ¨ 1238ஆம் ஆண்டில் ‘தாய்’ என்கிற சயாமிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது. அது ‘சுகோத்தாய்’ எனப்படும் பவுத்த நாடு எனக் கருதப்படுகிறது. ¨ கி.பி.13ஆம் நூற்றாண்டில் ‘கெமர்’ பேரரசு ஆட்சியில் இந்திய கலாச்சாரம் மற்றும் மதவாரியான தாக்கம் இங்கு பரவிவந்தது. கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் டாய், மொன், மலாய் என பல அரசுகள் உருவாகின. ¨ 14ஆம் நூற்றாண்டுகளில் பவுத்த ‘தாய்’ இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான்காஸ் எனப் பல எழுச்சி அடைந்து வந்தன. ¨ 14ஆம் நூற்றாண்டின் மத்தியில் ‘சாவோ பிரயா’ ஆறு பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட ‘அயுத்தயா’ இராச்சியம் ‘சுகோத்தாயின்’ பலத்தை மறைக்கத் துவங்கியது. ¨ 1431ஆம் ஆண்டில் அயுத்தயா அரசு தனது பாரம்பரிய வணிகத் தொழிலை சீனா முதல் இந்தியா வரையும், ஈரான் முதல் அரபு நாடுகள் வரையும் விரிவுபடுத்தி வந்தது. ¨ 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரும், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர். ¨ 1767இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சியடைந்தது. புதிய மன்னராக தக்சின் 15 ஆண்டுகளுக்கு தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார். ¨ 1782இல் தாய்லாந்தில் இரத்தனகோசின் அரசு உருவாகியது. ¨ மீண்டும் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகராக மாறியது. ¨ தென்கிழக்காசியாவின் நாடுகளுக்கிடையே தாய்லாந்து ஓர் இடைத்தாங்கு (buffer) நாடாக விளங்கிவந்தது. ¨ 19ஆம் நூற்றாண்டில் குறிப்பாக மேக்தொங்கின் கிழக்கில் பல பகுதிகளை பிரான்சு, மலாய், பிரிட்டிஷ் போன்ற நாடுகள் தன் பகுதிக்கு உட்படுத்தி ஆட்சி செய்ய நினைத்தன. ¨ 1909 ஆங்கிலோ_சயாமிய உடன்படிக்கையின்படி பினாங்கு மலேசியாவின் வடக்கு மாநிலமாகியது. ¨ 1932இல் இராணுவம், குடிமக்களின் புரட்சியின் காரணமாக மன்னர் பிரஜாதீபக் சயாம் மக்களுக்கு முதலாவது அரசியலமைப்பை அறிவித்தார். ¨ 1932 ஜூன் 24ஆம் நாள் பொதுமக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட குழுவின் இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த சக்கிரி வம்சம் முடிவுக்கு வந்தது. அங்கு அரசியல் சட்ட முடியாட்சி முறை கொண்டுவரப்பட்டது. ¨ 1932 முதல் 1973 வரையில் இராணுவமே ஆட்சியில் இருந்துவந்தது. ¨ 1980இல் பிரேம் தின்சுலாநந்தா பிரதமராகப் பதவியில் இருந்தபோது நாடாளுமன்ற ஆட்சி முறையை படிப்படியாகக் கொண்டு வந்தார். 1991_1992 வரை மீண்டும் ராணுவ ஆட்சிமுறை வந்தது. ¨ 2001 முதல் 2006 வரை பிரதமராக தக்சின் சினவாத்ரா இருந்தார். 2006இல் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைத்து இராணுவ ஆட்சி அமைந்தது. பொருளாதாரம்: ¨ நாணயம்: பாட். இதனை ஜிபிஙி என்னும் குறியீடு மூலம் அழைக்கின்றனர். ¨ நாட்டின் வருவாயில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. ¨ ஏற்றுமதிப் பொருளாக கார்கள், கணினி, மின்சாதனப் பொருள்கள், துணிமணிகள், செருப்பு, மீன் உணவு, ரப்பர் மற்றும் நகைகள் போன்றவை ஜப்பான், தென்கொரிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ¨ மக்கள் பெரிதும் புத்த சமயத்தைச் சார்ந்தே இருக்கின்றனர். ¨ மக்கள் ‘தாய்’ ஆங்கிலம், சைனீஸ் மொழிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ¨ பிற நாட்டினர் இங்குள்ள பெண்களை சட்டப்படி திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ¨ காதல் திருமணங்கள் இங்கே அதிகமாக நடைபெறுகின்றன. ¨ 40,000க்கும் மேற்பட்ட புத்தர் கோவில்கள் உள்ளன. ஆட்சிமுறை: பிரதமர்: மன்னர்: ¨ ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை _ அரசியல் சட்ட முடியாட்சி முறை ¨ பிரதமர் பிராயுத் சான் ஓ சா. ¨ மேலவை, கீழவை கொண்ட சட்டமன்ற முறை. ¨ மேலவையில் 150 உறுப்பினர்கள், கீழவையில் 350 உறுப்பினர்கள். ¨ பிரதமரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர். அவருடன் 35 இணை அமைச்சர்கள் செயல்படுவார்கள். ¨ நீதிமன்றங்கள் தன்னாட்சியுடன் இயங்கும் அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. போக்குவரத்து: ¨ இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல நிறைய படகுகள் விடப்பட்டுள்ளன. ¨ நகரத்தில் ஆட்டோ மற்றும் ரிக்சாக்கள் எளிமையாகக் கிடைக்கும். தலைநகர் பேங்காக்கின் அடையாளமாக ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. ¨ அரசின் மெட்ரோ ரயில், பேருந்து வசதியும் உள்ளது. மற்ற நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு: ¨ குத்துச்சண்டைப் போட்டிகள் மிக முக்கியத்துவமான விளையாட்டாகும். ¨ கால்பந்து, பேட்மிட்டன் ஆகியவை மக்களால் பெரிதும் விளையாடப்படுகின்றன. ¨ முயாய் தாய், பென்காக் சிலட் போன்ற தற்காப்புக் கலைகள் தாய்லாந்தின் பாரம்பரியமான விளையாட்டுகளாக கற்றுத்தரப்படுகின்றன. உணவு முறை: ¨ குழைந்த அரிசியில் செய்யப்படும் ஒருவகை உணவு இங்கே பொதுவான உணவு ஆகும். ¨ லாவோ சாலட் என்னும் இறைச்சி, வெங்காயம், மிளகாய், வறுக்கப்பட்ட அரிசி, புதினா கலந்த உணவு சிறப்பு வாய்ந்த ஒன்று. ¨ பன்றி இறைச்சி முக்கிய உணவு. ¨ கடல் உணவுகள், நூடுல்ஸ் போன்றவை அனைத்து உணவகங்களிலும் கிடைக்கும். பருவ நிலைகள்: ¨ சராசரியாக வெப்பநிலை 310 செல்சியஸ் முதல் 320 செல்சியஸ் வரை இருக்கும். ¨ கோடைகாலத்தில் அதிகப்பட்சமாக 400செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். ¨ டிசம்பர் மாதத்தில் 260செல்சியஸ் வெப்பநிலையும், நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிராகவும் காணப்படும். சுற்றுலாத் தலங்கள்: ¨ பேங்காக்கில் உள்ள ‘தி கிராண்ட் பேலஸ்’ (The Grand Palace) அரண்மனை நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. ¨ ‘சண்டே வாக்கிங் ஸ்ட்ரீட்’ சியாங் மையில் உள்ள மலிவு விலையில் உணவுகள் கிடைக்கும் நடைப் பயண தெரு. ¨ ரெய்லே பீச் (Railay Beach) - கிராபி மாகாணத்தில் உள்ள கடற்கரைகளில் ஒன்று. இங்கு கடல் நீர் நீலநிறத்தில் காணப்படும். பயணிகளுக்கான ஓய்வு இருக்கைகளும் உள்ளன. ¨ கோ யாய் தேசியப் பூங்கா (Khao Yai National Park) - இந்தப் பூங்காவில் யானைகளை நாம் அருகில் சென்று பார்க்கலாம். அதற்கு உணவிடுதல், அது குளியல் செய்யும் காட்சிகளை அருகிலே வழிகாட்டிகள் அழைத்துச் சென்று காட்டுவார்கள். ¨ காட்டுக்குள் ட்ரெக்கிங் வசதியும் உள்ளது. அங்குள்ள அழகான அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழலாம்.
|