Home முந்தைய இதழ்கள் 2020 அக்டோபர் 2020 நல்லுணவு
வியாழன், 30 மார்ச் 2023
நல்லுணவு
Print E-mail

கேழ்வரகு கம்பு சோளம்

கேடற்ற வரகு சாமை

கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக்

குலத்தமிழர் சீர்ஆ காரம்;

 

காலையிலே நீரா காரம்

கடும்கோடைக் கேற்றவா காரம்;

மாலையிலும் எளிதா யுண்டார்

மறத்தமிழர் அந்த நாளில்;

 

இட்டலியும் தோசை புட்டும்

இனிப்பான ஆப்பத் தோடு

தொட்டுண்ணச் சட்னி சாம்பார்

துணைவந்த நல்ஆ காரம்;

 

பொங்கலுடன் உப்பு மாவும்

பூரியுடன் நல்சப் பாத்தி

எங்கிருந்தோ வந்தி ணைந்த

இணையான உணவு கள்தாம்;

 

வெளிநாட்டுப் பீட்சா பர்கர்

வேண்டாமே; கேடே யாகும்;

துளிகூடச் சத்தே யற்றத்

தோதில்லாத் தீயா காரம்;

 

நம்நாட்டின் உணவு கள்தாம்

நம்முடலுக் கேற்ற வையாம்;

செம்மைநல வாழ்வுக் கென்றும்

செந்தமிழர் உணவே நன்றாம்.

- கே.பி.பத்மநாபன், கோவை.

Share