உறுப்புகளால் உயர்க! | |||
|
கண்கள் இரண்டும் இருக்கையிலே கல்வி நூல்கள் படித்திடலாம்; எண்ணும் எழுத்தும் கற்றிட்டால் என்றும் உலகை வென்றிடலாம்! காதி ரண்டின் வழியாய்நீ *காசி னியினை வென்றோரின் நீதி யாவும் கேட்டிடலாம்; நீயும் உலகை வென்றிடலாம்! நாவால் உரைக்கும் நல்லுரையால் நற்சிந் தனையைப் பரப்பிடலாம்; மேவாப் புகழின் மேதையென மெய்யாய் உலகை வென்றிடலாம்! கரங்கள் இரண்டும் இருக்கையில்நீ கடின மாக உழைத்திடலாம்; இரந்தே உண்டு வாழாமல் இங்கே எதையும் வென்றிடலாம்! இரண்டு கால்கள் இருப்பதனால் எங்கெங் கும்நீ எட்டிடலாம்; மரம்போல் நின்று மடியாமல் மண்ணைக் கடந்தும் வென்றிடலாம்! தோள்கள் இரண்டும் இருக்கையிலே துணிவாய்ச் சுமையைச் சுமந்திடலாம்; தூள்தூள் ஆகும் துன்பங்கள்; தோல்வி யின்றி வாழ்ந்திடலாம்! தலையின் உள்ளே அறிவிருக்க தரையை வெல்லப் பயமெதற்கு? மலையைக் கூடப் பொடித்தேநீ மண்ணை வென்று காட்டிடலாம்! இதயத் துள்ளே மனிதமுடன் எல்லா உறுப்பும் செயல்பட்டால் உதய மாகும் புதுவிடியல்; உனதே வெற்றிச் சாதனைகள்! *காசினி - உலகம் - கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை
|