
மரம்வளர மழைதான் வேண்டும்; மழையிருந்தால் தண்ணீர் கிட்டும்; தரம்நிறைந்த தண்ணீ ரையே தரையடியில் சேமிப் போம்நாம்!
கனமழையில் நீர்சே மித்தால் காடெல்லாம் செழித்தே ஓங்கும்; வனம்நிறைந்த புவியில் என்றும் வற்றாத மழைநீர் கிட்டும்!
ஆறுகுளம் ஏரி தன்னை ஆழமுடன் செப்ப னிட்டால் சீறுமழைக் கால வெள்ளம் சேமிப்பாய் ஆகும் திண்ணம்!
நதியெல்லாம் ஒன்றி ணைத்தால் நாடெல்லாம் செழிப்பா யாகும்; நிதியாக இயற்கை ஈந்த நீர்க்கொடையைச் சேமிப் போம்நாம்!
நீரில்லாப் புவியில் ஏதும் நிலைத்தென்றும் வாழ்வ தில்லை; மாரியிங்கே பொழிவ தற்கு மரம்நிறைந்த வனங்கள் காப்போம்!
மழை,புவி,நீர் மூன்றும் மண்ணில் மகத்தான ஒன்றி ணைப்பாம்; விழைந்தவற்றைக் காப்ப தற்கு விரைந்துசெயல் படுவோம் நாமே!< (உலக பூமி நாள் - மார்ச் 20 உலக வன நாள் - மார்ச் 21 உலக நீர் நாள் - மார்ச் 22)
- கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்
|