சாதனைப் பிஞ்சுகள் | |||
|
பல்துறை கவுதமன் தேனி மாவட்டம் பெரியகுளம். நகரைச் சார்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும். ஏழு வயதுச் சிறுவன் கவுதமன். இவனுடைய தந்தையார் பெயர் ரமேஷ்குமார் _ ஆசிரியர், தாயார் பெயர் தாழையம்மாள். மகிழ்வுடன், ஊர் திரண்டு பாரட்டியது கிருட்டினகிரி மாவட்டம் ஒசூர் முனீஸ்வர் நகரைச் சேர்ந்த சிவன் என்பவர், ஒசூர் டைட்டன் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான அவருடைய மகள் ஒசூர் ‘S&S BATMINTON ACADEMY’ இல் பயிற்சி பெற்று, பக்ரைனில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற‘ASIAN YOUTH PARA GAMES’ இல் இந்தியாவிற்காக தங்கப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று தங்க மகளாக இந்தியா திரும்பிய செல்வி நித்யஸ்ரீக்கு அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் மகிழுந்தில் (Car) நிற்க வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, முனீஸ்வர் நகர் சமுதாயக் கூடத்தில் உள்ள பெரியார் மன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்போர் சங்கத் தலைவர் ரவிகுமார் தலைமையில் பாராட்டுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நித்தியஸ்ரீக்கு சால்வை அணிவித்து பூச்செண்டு வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி குடியிருப்போர் சங்க மேனாள் தலைவரும் ஒசூர் கழக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.வனவேந்தன் மற்றும் மகளிர் பாசறைத் தலைவர், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சால்வை போர்த்தி பெரியார் நூல்களை அளித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் குடியிருப்போர் சங்க நிருவாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சியினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
|