
தண்ணீர் பாய்ச்சிப் பதிப்பது - இது தரையைக் கீறி முளைப்பது! மண்மேல் தோகை விரிப்பது - தழை மடலை வாளாய் வளைப்பது!
குண்டாய் உருண்டு பருப்பது - வந்து குவிந்து கடையில் கிடப்பது! கண்டோர் வாங்கக் கிடைப்பது - நன்கு கறிக்கு வாசம் கொடுப்பது!
கொண்டா என்றே எடுப்பது - ஏழைக் குடும்பம் கையில் பிடிப்பது! ஒன்றோ ரெண்டோ கடிப்பது - கூழை உறிஞ்சி நன்றாய்க் குடிப்பது!
தொண்டு செய்தே பழுத்தவர் - வெண்மைத் தூய தாடி வளர்த்தவர்! மண்டும் மடமை ஒழித்தவர் - பேச்சில் மணமாய்க் கமழ்ந்து ஒலித்தது!
எண்ணி யாரும் உரித்திடும் - போது எல்லாம் தோலாய் இருப்பது! கண்ணில் நீரும் சுரப்பது - ‘வெங் காயம்’ பேரால் சிறப்பது!
- தளவை இளங்குமரன், இலஞ்சி, தென்காசி
|