உலக நாடுகள் : தென் ஆப்பிரிக்கா( South Africa) | |||
|
அமைவிடமும் எல்லையும்: * தென்னாப்பிரிக்க நாடு ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அருகே அமைந்துள்ளது. * வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உள்ளன. * கிழக்கில் மொசாம்பிக் மற்றும் ஸ்விஸ்லாந்து அமைந்துள்ளன. * நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,219,912 சதுர கி.மீ. (470,000 சதுர மைல்) * தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன. அவை கேப் டவுன், பிரிட்டோரியா, புளோயம் ஃபாண்டைன். மக்களும் மொழியும்:
* மக்கள் தென்னாப்பிரிக்கர் என அழைக்கப்படுகின்றனர். * 80.2% கறுப்பினத்தவர், 8.8% வெள்ளை இனத்தவர், 8.4% வேறு நிறம், 2.6% ஆசியர்கள் வாழ்கின்றனர். * ஆட்சி மொழிகள் மொத்தம் 11; கூடுதலாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 8. அதில் தமிழும் ஒன்று. * உலக மக்கள் தொகை வரிசையில் 25ஆவது இடத்தில் உள்ளது.
வரலாறு: * உலகின் பழமையான தொல்பொருள் ஆய்வுத் தளங்கள் அதிகம் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. * ஸ்டெர்க்ஃபாண்டின், குரோம்திராய் மற்றும் மகபன்ஸ்கட் குகைகளில் உள்ள பரந்த அளவிற்கான புதைபடிவங்கள், மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று உள்ள மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உள்பட பல்வேறு மனித இனங்ள் இங்கு வாழ்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. * 1050ஆம் ஆண்டிலிருந்து சோசா மக்கள் குழு இங்கு வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். * 1487ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவை அடைந்த முதல் அய்ரோப்பியர் போர்ச்சுக்கீசிய கண்டுபிடிப்பாளரான பார்டலோமு டயஸ் ஆவார். * 1652ஆம் ஆண்டில் ஜேன் வான் ரீ பீக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக மய்யம் ஒன்றை நிறுவினார். * இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் இந்தியாவி-லிருந்தும் தொழிலாளர்கள் அடிமைகளாக டச்சுக்காரர்களால் கொண்டு செல்லப்பட்டனர். * 1795ஆம் ஆண்டில் நன்னம்பிக்கை முனைப் பகுதியை பிரித்தானியப் பேரரசு கைப்பற்றியது. கடல் பயணத்திற்காக கேப் டவுனை பயன்படுத்திக் கொண்டது. * 1806ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு கேப் டவுனை தனது காலனியாக இணைத்துக் கொண்டது. * பிரிட்டிஷ் அரசு 1807இல் அதனுடைய உலகளாவிய கொத்தடிமை வணிகத்தை நிறுத்தியது. 1833இல் காலனி நாடுகள் அனைத்திலும் கொத்தடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. * 19ஆம் நூற்றாண்டில் சூலு மக்கள் அதிகாரத்திற்கு வந்தனர். * 1867ஆம் ஆண்டில் வைரங்கள் கண்டு-பிடிக்கப்பட்டன, 1884ஆம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. * 1931ஆம் ஆண்டில் வெஸ்ட்மினிஸ்டர் சட்டத்தின் மூலம் பிரிட்டிஷிடமிருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. * 1961ஆம் ஆண்டில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கு கொண்ட வாக்கெடுப்பின்படி நாடு குடியரசானது. * விடுதலைக்காகப் போராடி தண்டனை பெற்ற நெல்சன் மண்டேலா 1990ஆம் ஆண்டு விடுதலை பெற்றார். * 1994ஆம் ஆண்டில் பல இனங்கள் பங்குகொண்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்றார். அரசு முறைகள்: * பாராளுமன்ற அவைகளைக் கொண்ட அரசுமுறை. தேசிய கவுன்சில் (மேலவை) 90 உறுப்பினர்களைக் கொண்டது. தேசிய அசெம்பிளி (கீழவை) 400 உறுப்பினர்களைக் கொண்டது. * தேர்தல் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும். * தேசிய அசெம்பிளியின் பெரும்-பான்மைக் கட்சியின் தலைவர் அதிபராக இருப்பார். * தற்போதைய அதிபர்: சிரில் ராமபோசா * கேப் டவுன் அரசியல் தலைநகரமாகச்(Legislative Capital) செயல்படுகிறது.
நெல்சன் மண்டேலா பொருளாதாரம்: * நாணயம்: தென்னாப்பிரிக்க ‘ராண்டு’ என அழைக்கப்படும். * ஏராளமான கனிம வளங்கள் இருப்புக் கொண்ட நாடு. * அய்.நா. வகைப்படுத்தலின்படி நடுத்தர வருமானம் உடைய நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. * கட்டுமானம், சுற்றுலா, விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. * வைரங்கள், பழங்கள், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், கனிமங்கள், சர்க்கரை மற்றும் கம்பளி முதலியவை ஏற்றுமதிப் பொருளாகும். * புதிய இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியம், வேதிப் பொருட்கள் ஆகியவை இறக்குமதி பொருளாகும். மக்கள் கலாச்சாரம்: * பன்மைத்துவம் கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. * ‘ஒற்றை’ப் பண்பாடு என மக்களை வலியுறுத்துவதில்லை. * தென்னாப்பிரிக்க மக்கள் இசையில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள். * பெரிதும் அசைவ உணவை விரும்பி உண்ணுவார்கள். * சூலு, சுவாசி, சோசா பழங்குடிமக்கள் சேர்ந்து வாழ்கின்றனர். சுற்றுலா இடங்கள்: * தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களைக் கொண்டுள்ளது. * டிராகன்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கும் ஜெசுத்தி மலை (3,408 மீ) உயரத்தில் அமைந்த மிகப் பெரிய மலையுச்சியாகும். * ஜோகன்னஸ்பர்க் நகரில் சுண்ணாம்புக்கல் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகை உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். இது ‘மனித குலத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது. * சாகசக்காரர்களுக்குப் பிடித்தமானது பில் ஹாரோபின் பலூன் சவாரி. * மரோபெங்க் என்ற இடத்தில் மனித குலம் எவ்வாறு தோன்றியது, கண்டங்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தன என்பதை ஒலி _ ஒளிக் காட்சியின் மூலம் விளக்குகின்றனர். * தனியார் வனவிலங்கு சரணாலயங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது. அவற்றில் வனவிலங்குகளை அருகிலிருந்து காண முடிகிறது. * தென்னாப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன்(Jagers Fontein) என்ற இடத்தில் இருக்கும் வைரச் சுரங்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். * ஜோகன்ஸ்பார்க்கில் காந்தியாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் வாழ்க்கைக் குறிப்புகள் பொறிக்கப்-பட்டுள்ளன. காந்தியாருக்கு பெரிய சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டு: * கால்பந்து, ரக்பி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை மக்கள் விரும்பி விளையாடுகின்றனர். * ‘ரக்பி’ உலகப் கோப்பையை முதல் முயற்சியிலேயே தென்னாப்பிரிக்கா அணி வென்றது. * 2010ஆம் ஆண்டு பிபா (திமிதிகி) கால்பந்து உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியது. * தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர்கள் உலகப் புகழ்பெற்றவர்கள். காந்தியாரும் தென்னாப்பிரிக்காவும்: * காந்தியார் முதன்முதலில் தன் அடிமைத்தனத்தை உணர்ந்த இடம். * காந்தியாரின் அகிம்சைவாதத்தை கருப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா பின்பற்றினார். * தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கான போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட தமிழர்கள் காந்தியாருக்கு உறுதுணையாக இருந்தனர். * எனினும் அங்கிருந்த இந்தியர்களுக்காகப் போராடிய கந்தியார், அங்கிருந்த கருப்பின மக்களை இனவெறுப்போடு அணுகினார் என்று இன்றைய ஆப்பிரிக்க இளைஞர்கள் எதிர்ப்புகாட்டுகின்றனர்.
|