1. தலையைச் சீவினேன் தாகம் தீர்ந்தது. - அது என்ன?
2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி-அது என்ன?
3. தேடாமல் கிடைப்பது தேடும் செல்வத்தைக் குறைப்பது. - அது என்ன?
4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். - அது என்ன?
5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார் கேணிக்குள் குதித்தார். - அது என்ன?
6. தளதள மேனிக் கெம்புக்கல் தவழ்ந்து செல்லும் கெம்புக்கல் நீரில் மிதக்கும் கெம்புக்கல் நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். - அது என்ன?
7. வளைந்த தங்கக் கம்பி வானத்திலே போட்ட கம்பி எடுக்க வராத கம்பி எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. - அது என்ன?
8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம் மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். - அது என்ன?
9. நீல நிறத் தோட்டத்திலே மஞ்சள் பூ பூத்திருக்கு. - அது என்ன?
10. தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாய் இருக்கிறது பாக்கு வெற்றிலை போடாமல் வாய் சிவப்பாய் இருக்கிறது. - அது என்ன?
விடையைக் காண இங்கு அழுத்தவும்
|