சிங்கப்பூர் | |||
|
அமைவிடமும் எல்லைகளும்: ¨ சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள பெரிதும் நகரமயமான ஒரு தீவு நகரம் -_ நாடு. ¨ ஒற்றை நகரம் என்பதால் சிங்கப்பூரே தலைநகரமும் ஆகும். ¨ ஜொகூர் நீரிணை இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. ¨ தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவிடமிருந்து பிரிக்கிறது. ¨ அண்டை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா நாடுகள் உள்ளன. ¨ நாட்டின் மொத்த பரப்பளவு 704 கி.மீ2 (270 சதுர மைல்.) பெயர்க்காரணம்: ¨ சிங்கப்பூர் சிங்கம்+ஊர்=சிங்கப்பூர். அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ்ப் பொருளைக் கொண்டது ஆகும். ¨ இது சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. வரலாறு: ¨ சிங்கப்பூர் _ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. ¨ 14ஆம் நூற்றாண்டில் ‘துமாசிக்’ என்ற பெயர் கொண்ட நகரமாக விளங்கியது. ¨ 15ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ‘துமாசிக்’ நகருக்கு ‘சிங்கப்பூர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. புவியியல்: ¨ சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது. ¨ சிங்கப்பூர், மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ¨ ‘புகிட்திம்’ என்பது குறிப்பிடத்தகுந்த பெரிய காடாகும். பொருளாதாரம்: ¨ சிங்கப்பூர் ஆசியாவின் ‘ஜிப்ரால்டர்’ என்று அழைக்கப்படுகிறது. ¨ உலகில் உள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்று. ¨ சிங்கப்பூர் உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. ¨ உலகில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 14ஆம் இடம். ¨ இறக்குமதி செய்வதில் உலகளவில் 15ஆவது நாடு. ¨ இந்தியாவின் இரண்டாவது பெரிய அந்நிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். ¨ சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (Singapore dollar) யாகும். ¨ இயந்திரப் பொறியியல் துறை, உயிரி மருத்துவ அறிவியல் துறை, வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன ¨ சிங்கப்பூர் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் சூதாட்ட விடுதிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. ¨ சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாகும். ¨ அதிக அளவில் பணக்காரர்கள் (மில்லியனர்கள்) உள்ள நாடு. போக்குவரத்து: ¨ சிங்கப்பூர் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர். இதில் 161 கி.மீ விரைவுச் சாலையாகும். ¨ மேம்படுத்தப்பட்ட சாலை மின்னணுத் திட்டம் கொண்டு வரப்பட்டு மின்னணு முறையில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது. ¨ ஆசியாவில் பன்னாட்டு கப்பல் போக்குவரத்தின் முக்கிய மய்யமாக சிங்கப்பூர் விளங்குகிறது. ¨ ஒரு கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் மய்யமாகவும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மய்யமாகவும் திகழ்கிறது. ¨ உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுக-மாகவும் சிங்கப்பூர் உள்ளது. ¨ 8 விமான நிலையங்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி விமான மய்யமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. ¨ சிங்கப்பூர் ‘சாங்கி’ (சிலீணீஸீரீவீ) விமான நிலையம் 80 விமானங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. ¨ இங்கிருந்து 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களுக்கு உடனுக்குடன் விமான சேவை உள்ளது. கல்வி: ¨ மாணவர்களின் பள்ளிக் கல்விக்கு பெரும்பாலும் அரசே உதவி செய்கிறது. ¨ அரசுப் பள்ளிகளின் பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ¨ ‘தாய்மொழி’ தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகின்றன. ¨ சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ‘நன்யாங்’ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகின்றன. மொழியும் மக்களும்: ¨ ஆட்சிமொழியாக மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகியவை உள்ளன. ¨ தேசிய மொழி மலாய். தேசிய கீதமும் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ¨ நாட்டு மக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அல்லது 5 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்தமொழியாகப் பேசுகின்றனர். ¨ சிங்கப்பூரின் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மொழியாக ஆங்கிலமே உள்ளது. ¨ சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது. ¨ சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய், தமிழர்கள், சீனர்கள், அரபு நாட்டினர் பண்பாடுகளே அதிக அளவு பின்பற்றப்படுகின்றன. ¨ மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வெளிநாட்டவராக உள்ளனர். ¨ மக்கள் தொகை 6 மில்லியன். ¨ நிலப் பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்குமாடி வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ¨ குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடு. ¨ பவுத்தம், கிறித்துவம், இசுலாம், டாவோயிசம், இந்து, சீக்கியம் போன்ற பல மதங்களைக் கொண்ட நாடு. விளையாட்டு: ¨ பிரபலமான விளையாட்டுகள்: கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டுதல், மேசைப்பந்து, பூப்பந்து ஆகியன. ¨ தண்ணீர் விளையாட்டுகளான ஸ்கூபா, டைவிங், கயாகிங், நீர்ச்சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன.
¨ பாராளுமன்ற குடியரசு அரசாங்கம் நடைபெறுகின்றது. ¨ அதிபரும், பிரதமரும் அதிகாரமிக்கவர்கள். ¨ சிங்கப்பூர் ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசிடம் காலனி நாடாக இருந்தது. பின்பு மலேசியாவிடம் இணைந்தது. இறுதியில், ஆகஸ்ட் 9, 1965இல் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடானது.
¨ ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்கள் உள்ளன. ¨ ‘வசந்தம்’ என்னும் தமிழ் தொலைக்காட்சி, ‘ஒலி’ என்னும் தமிழ் வானொலி, ‘தமிழ்முரசு’ என்னும் தமிழ் செய்தித்தாள் உள்ளிட்ட முன்னணி தமிழ் ஊடகங்கள் சிங்கப்பூரில் உள்ளன. ¨ அனைத்து ஊடகங்களும் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே இயங்குகின்றன. ¨ இங்கு ஊடக சுதந்திரம் குறைவு.
¨ லீ குவான் யூ பிரதமராக இருந்த 1959 முதல் 1990 வரையான காலப்பகுதியில், வேலையில்லா திண்டாட்டம், வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை ஆகியன தீர்க்கப்பட்டன. ¨ இவர் ‘சிங்கப்பூரின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ¨ இவராலேயே சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததுடன் நாட்டின் பொருளாதாரம், உள் கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடைந்தன.<
|